

இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் நினைவுச்சுடர் ஏற்றி, நினைவுத்தூபிக்கு மலர்மாலை அணிவித்தார். 

மேலும், இந்நிகழ்வில் வடமாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம், மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களான கஜதீபன், சிவாஜிலிங்கம், பரம்சோதி ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.