சிறுவர் தினமான ஒக்டோபர் முதலாம் நாள் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு!

0
5

சிறுவர் தினமான ஒக்டோபர் முதலாம் திகதி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத் தலைவி க.கோகிலவாணி தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கையளிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி வேண்டி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here