யாழ்.சாவகச்சேரி விபத்தில் படுகாயமடைந்த நாதஸ்வர வித்துவான் உயிரிழப்பு!

0
5

யாழ்.சாவகச்சேரியில் உந்துருளி மதிலுடன் மோதியதில் இளம் குடும்பஸ்தரான தநாதஸ்வரவித்துவான் ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் பாற்பண்ணை வீதி, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த பாலசேகர் ஹரிபிரசாத் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 15ஆம் திகதி முல்லைத்தீவில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு குறித்த குடும்பஸ்தர் நாதஸ்வர கச்சேரிக்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து, நோயாளர்காவுழண்டிக்கு அறிவித்தல் வழங்கிய நிலையில் ஒரு மணத்தியாலத்திற்கு பின்னரே வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்பின்னர் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுதினம் மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here