நல்லூரில் தியாக தீபம் நினைவான ஓவியப் போட்டியில் ஆர்வம் காட்டும் சிறுவர்கள்!

0
23

நல்லூர் தியாக தீபம் திலீபன் நினைவுத் தூபிப் பகுதியில் ‌மூன்று தினங்கள் இடம்பெற்றுவரும் மாணவர்களுக்கான தியாக தீபம் திலீபன் நினைவு சுமந்ந ஓவியப் போட்டிகளில் சிறுவர்கள் ஆர்வத்தோடு பங்குபற்றிவருகின்றனர்.

நேற்றுமுன்தினம் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, நேற்று திங்கட்கிழமை மற்றும் இன்று செவ்வாய்க்கிழமை ஆகிய மூன்று நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை இடம்பெறுகிறது.

இப்போட்டியில் ஆர்வமுள்ள மாணவர்கள் கலந்துகொண்டு பெறுமதியான பரிசுகளை‌ பெறலாம் என தியாக தீபம் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு தெரிவித்திருந்தது.

தலைமுறை நூறுகடந்தாலும் எம் வரலாறு பேசப்படும் என்பதற்கு சான்றாக இது அமலந்துள்ளது எனவும் –

தியாக தீபத்தின் உருவத்தை உள்வாங்கி மிகத் தத்ரூப ஓவியமாக சிறுவர்கள் வரைவது மெய்சிலிர்க்க வைப்பதாகவும் –

நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here