தியாகதீபம் திலீபன் ஊர்தி பவனிக்கு மக்கள் திரண்டு அஞ்சலி!

0
96

தியாகதீபம் திலீபன் அவர்களின் 37வது ஆண்டையொட்டிய ஊர்தி பவனி இன்று செவ்வாய்க்கிழமை வவுனியா பொங்குதமிழ் நினைவுத்தூபியில் ஆரம்பமாகி A9 வீதிவழியாக நகர்ந்து செல்கிறது.

குறித்த ஊர்தி தரித்து நிற்கும் இடங்களில் மக்கள் அணிவகுத்து மலர்தூவித் தமது நினைவேந்தலைச் செய்துவருகின்றனர்.

இந்த ஊர்தியானது தமிழர்தாயகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று‌ பின்னர் நல்லூரில் உள்ள தியாக தீபம் நினைவுத்தூபிப் பகுதியைச் சென்றடைந்து அங்கு வணக்க நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

அத்துடன் நல்லூரில் குறித்த பகுதியில் தியாக தீபத்தின் நினைவுசுமந்து இரத்த தானம், ஓவியப் போட்டி, அடையாள உணவு தவிர்ப்பு போன்றவையும் இடம்பெற்றுவருகின்றன.

இந்நிகழ்வுகளில் கலந்துகொள்ள அனைவருக்கும் ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்புவிடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here