ஜேர்மனியில் “மானிட உரிமைக்குரல் ” விராஜ் மென்டிஸ் அவர்களின் புகழுடலுக்கு தமிழீழ தேசியக் கொடி போர்த்தி மதிப்பளிப்பு!

0
109

தமிழின விடிவிற்காக நீண்டகாலமாகப் பாடுபட்டுவந்த அனைத்துலக மனித உரிமைகளின் அமைப்பின் தலைமை இயக்குனராகிய “மானிட உரிமைக்குரல் ” விராஜ் மென்டிஸ் அவர்களின் வணக்கநிகழ்வு நேற்றுமுன்தினம் 31.08.2024 சனிக்கிழமை ஜேர்மனியில் இடம்பெற்றது.

நந்திக்கடல் மண் அவரது பேழையில் வைக்கப்பட்டு அவரது புகழுடலுக்கு தமிழீழ தேசியக்கொடி போர்த்தப்பட்டு மதிப்பளிப்பு செய்யப்பட்டது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலகத்தொடர்பகம் அமரர் விராஜ் மென்டிஸ் அவர்களுக்கு “மானிட உரிமைக்குரல் ” என மதிப்பளிப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இருந்தும் உணர்வாளர்கள் பலரும் கலந்து கொண்டு இறுதி வணக்கம் செலுத்தி இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here