கிளிநொச்சி ஏ9 வீதியில் உத்துருளியை மோதிய பாரவூர்தி: ஒருவர் பலி!

0
19

கிளிநொச்சி ஏ9 வீதியில் இன்று இடம்பெற்ற பாரவூர்தி மோதிய விபத்தில் உந்துருளியில் சென்றவர் உயிரிழந்துள்ளார்.

கனகாம்பிகைக் குளம் பகுதியைச் சேர்ந்த அருள்நேசன் அருள்வதனன் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
155 ம் கட்டை சந்தியில் ஆட்களை ஏற்றுவதற்காக குறுந்தூர பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி நோக்கி பயணித்த உந்துருளி பேருந்தை முந்தி பயணித்துள்ளது.

இதன்போது, அதே திசையில் பயணித்த பாரவூர்தி ஒன்று குறித்த உந்துருளியை மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் உந்துருளியில் பயணித்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். விபத்துக்குள்ளான பாரவூர்தியின் சாரதி கிளிநொச்சி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here