காணாமல் ஆக்கப்பட்டோரின் குழந்தைகளால் வரையப்பட்ட சித்திர கண்காட்சி!

0
22

காணாமல் ஆக்கப்பட்டோரின் குழந்தைகளால் வரையப்பட்ட சித்திர கண்காட்சி ‘நீதிக்கான நடை பயணம்’ எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது. குறித்த கண்காட்சியானது, நேற்று (26.08.2024) திங்கட்கிழமை பகல் மத்திய பேருந்து நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, வடக்கு மாகாணத்தின் உள்ள போரின் போது காணாமல் போன மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் யுவதிகளிடம் நடத்தப்பட்ட சித்திர கண்காட்சியில் போர் குறித்து அவர்கள் மனதில் பதிந்த விடயங்களை ஓவியங்களாக வரைந்து காட்சிப்படுத்திளிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here