முல்லைத்தீவில் இன்று செஞ்சோலை படுகொலையின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல்!

0
53

முல்லைத்தீவு வள்ளிபுனம் – இடைக்கட்டு பகுதியில் கடந்த 2006 ஆம் ஆண்டு செஞ்சோலை வளாகத்தில் சிறிவங்கா விமானப்படையினரின் வான் குண்டுத் தாக்குதல் படுகொலையில் உயிரிழந்த சிறுவர்களின் நினைவேந்தல் நிகழ்வு இன்று 14.08.2024 புதன்கிழமை நினைவேந்தப்பட்டது.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி செஞ்சோலை வளாகத்தில் சிறிலங்கா விமானப்படையினால்; நடத்தப்பட்ட வான் தாக்குதலில் உயிரிழந்த 53 சிறுவர்கள் மற்றும்; பணியாளர்கள் உட்பட 61 பேரினதும் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வான் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் தாக்குதல் இடம்பெற்ற நேரத்தில் நினைவேந்தப்பட்டுள்ளது.

உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி அக வணக்கம் செலுத்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அஞ்சலி நிகழ்வில் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.குகன் பொதுமக்கள் சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here