“கிழக்குப் பறிபோவதை வடக்கு வேடிக்கை பார்க்காது”- தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி!

0
49

வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம். கிழக்குப் பறிபோவதை வடக்கு வேடிக்கை பார்க்காது என தமிழ்த் தேசிய மக்கள்முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் முழு வடிவம் வருமாறு:-

“கிழக்குப் பறிபோவதை வடக்கு வேடிக்கை பார்க்காது”

கிழக்கின் முதுசமும் தமிழர்களின் அடையாளமுமான திருகோணமலை #திருக்கோணேச்சரம் ஆலயத்தை யாப்பு விதிகளுக்கு மாறாகச் செயற்பட்டு அரசுடைமையாக்கத் திட்டமிடும் கிழக்கின் ஆளுநர் #செந்தில் #தொண்டமானின் அடாவடிகளை வன்மையாகக் கண்டிப்பதோடு ஆலயச் செயற்பாடுகள் சுயாதீனமாக இடம்பெற வேண்டுமென்று கோருகின்றோம். ஆளுநரின் அடாவடிகள் தொடர்தால் வடக்குக் கிழக்கில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலமை ஏற்படும் என்பதை இத்தால் சம்பந்தப்பட்டோருக்குத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம். #னகிழக்குப் பறிபோவதை வடக்கு வேடிக்கை பார்க்காது என்பதை ஆளுநர் அறிவாராக! அரசின் எலும்புத் துண்டுகளுக்காகத் தமிழரின் வரலாற்றுத் தொன்மைகளைச் சீரழிக்கும் நிகழ்ச்சி நிரலைக் கைவிடுமாறு கிழக்கின் ஆளுநரைக் கோருகின்றோம்.

க. சுகாஷ்,
பேச்சாளர்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here