குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் பொது நினைவேந்தல்!

0
86

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் பொது நினைவேந்தல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காலகட்டங்களில்
சாவினைத் தழுவிய,
தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செழுத்தும் நிகழ்வு பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது,
தமிழின வறலாற்றில் என்றுமே மறக்கமுடியாத ‘வெலிக்கடை சிறைப் படுகொலை ‘ இடம்பெற்ற நாளான எதிர்வரும்
ஜூலை 25 ஆம் திகதி, வியாழக்கிழமை மாலை 3.05 மணிக்கு,
யாழ்ப்பாணத்திலுள்ள ‘தந்தை செல்வா கலையரங்கில்’ ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
சமூகத்தின் பெயரில் இலங்கைச் சிறைகளுக்குள் இரையாக்கப்பட்ட எமது உறவுகளை உணர்வுபூர்வமாக நினைவுகூறும் இந்நிகழ்வில்,
சர்வமதத் தலைவர்கள்,
அரசியல் கைதிகளின் பெற்றோர் உறவினர்கள், முன்னைநாள் அரசியல் கைதிகள், சர்வகட்சி அரசியல் பிரதிநிதிகள்,
சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவ மற்றும் ஆசிரியர் சமூகத்தினர், ஊடகத்துறை சார்ந்தவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தவறாது கலந்துகொள்ளுமாறு சமூக உரிமையோடு அழைத்து நிற்கின்றோம்!

நன்றி,
‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here