
இந்தியப் படைகளால் தமிழர் தாயகத்தில் வலிந்து திணிக்கப்பட்ட போரையும் அடக்குமுறைகளையும் நிறுத்த வலியுறுத்தி, மட்டக்களப்பு மண்ணில் உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின், உண்ணாவிரத அறப்போராட்டத்தின் இறுதி வார 3ஆம் நாள் நேற்று வெள்ளிக்கிழமை, பல்கலை மாணவர்களால் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது.

அன்னை பூபதியின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழர் தாயகம் உள்ளிட்ட தமிழர் வாழும் தேசம் எங்கும் இவ்வருடமும் நினைவேந்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
