முழங்காவில் பகுதியில் மகிழுந்து மீது சிறிலங்கா காவல்துறை துப்பாக்கிச் சூடு சாரதி படுகாயம்!

0
139

முழங்காவில் பகுதியில் மகிழுந்து மீது சிறிலங்கா காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

36 வயதுடைய செல்வமகேந்திரம் கமலரூபன் என்ற நவாலி மானிப்பாயை சேர்ந்தவரே இதன்போது படுகாயமடைந்தவராவார்.

யாழில் இருந்து மன்னார் நோக்கி நேற்று இரவு 9.30 மணியளவில்  பயணித்த சமயம், முழங்காவில் பகுதியில் காவல்துறை யினர் வீதிச் சோதனைக்காக வழி மறித்தும் நிறுத்தாமல் சென்றபோதே துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது சூடுபட்டவர் மன்னார் வரை பயணித்து மன்னார் வைத்தியசாலையில் சென்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here