உலக அஞ்சல் தினம் இன்று!

0
539

Tamil_Daily_News_8040844202042ஆதி காலத்தில் செய்தி பரி­மாற்றம் புகை எழுப்­புதல், கூக்­குரல் ஒலி, அம்பு மூலம் புறா, அஞ்சல் ஓட்டம் (அடர்ந்த காடுகள்) ஊடாக இடம்­பெற்­றது. நாள­டைவில் அஞ்­சல், குதிரை வண்டி, றோயல் வான் (Royal van) புகை­யி­ரதம், பேருந்து, விமானம், கப்பல் ஊடாக நடை­பெற்று வந்தது. இன்று குறும் செய்தி (SMS), மின்­னஞ்சல் (Email), தொலை­நகல் (Fax) என வளர்ச்சி பெற்­றுள்­ளதை அவ­தா­னிக்க முடியும்.
பல ஆண்­டு­க­ளுக்கு முன்பு கடிதத் தொடர்பு ஐரோப்பிய நாடு­களில் இருந்து மேற்கொள்­ளப்­பட்­டது. படிப்­ப­டி­யாக ஏனைய நாடு­களும் கடிதத் தொடர்­பு­களை ஆரம்­பித்த போது அஞ்சல் கட்­டணம் அற­வி­டு­வதில் பல பிரச்­ச­ினைகள் ஏற்­பட்­டன.
அதனை நிவர்த்தி செய்யும் முக­மாக அமெரிக்க அஞ்சல் மாஅ­தி­பதி 1863 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் 15 நாடுகள் இணைத்து ஒரு கட்­ட­மைப்பை ஸ்தாபித்தார். மீண்டும் (1878.10.09) இல் சர்­வ­தேச அஞ்சல் ஒன்­றியம் (UPU) என்று மாற்றி அமைக்­கப்­பட்­டது. அந்த தினம் இன்று உலக நாடு­களில் ஒக்டோபர் 9 ஆம் திகதி உலக அஞ்சல் தின­மாக கொண்­டா­டப்­ப­டு­கி­றது. தற்­போது 194 நாடுகள் அங்கம் வகிக்­கின்­றன. 1877 இல் இலங்கை அங்­கத்­துவம் பெற்­றது. சுதந்­திர நாடு என்ற வகையில் இலங்கை (1949.07.13) மீண்டும் அங்­கத்­துவம் பெற்­றது.
இலங்­கையில் கிழக்­கிந்­திய கம்­ப­னி­களால் கரை­யோர மார்க்­க­மாக அஞ்சல் சேவை ஆரம்­பிக்­கப்­பட்­டன. 1812 இல் மக்கள் செறிந்து வாழ்ந்த திரு­கோ­ண­மலை, யாழ்ப்­பாணம், மன்னார், கொழும்பு, காலி, மாத்­தறை ஆகிய இடங்­களில் தபால் அலு­வ­ல­கங்கள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. 1921 இல் ஆன­ம­டுவ, திவு­ல­பிட்­டிய, கிரி­யெல்ல, அக்­மீ­மன, மூதூர், சிலா­வத்­துறை ஆகிய இடங்­களில் உப தபா­ல­கங்கள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.
இலங்­கையில் 1832 இல் குதிரை வண்டி, 1805 இல் புகை­யி­ரதம், 1928 இல் ஆகாய விமானம், 1958 இல் பேருந்து மூலம் தபால்கள் பரி­மாற்றம் செய்­யப்­பட்­டன.
கொழும்பு மத்­திய தபால் தரம் பிரிக்கும் நிலையம் (CME) மையப்­ப­டுத்தி இரவு வேளை­களில் நாட்டின் பல பாகங்­க­ளிற்கு தபால் பொருட்கள் அனுப்பி வைக்­கப்­ப­டு­வ­தோடு அங்கு இருந்து எடுத்தும் வரப்­படு­கி­ன்றன.
முதல் நாள் அஞ்சல் இடப்­படும் அஞ்சல், தபா­லகம், உப தபா­ல­கங்­களில் உள்ள தபால் சேவகர் மூலம் அடுத்த நாள் துவிச்­சக்­க­ர­வண்டி, நடை மூல­மாக விநி­யோகம் செய்­யப்­ப­டு­கி­றது. தபால் சேவ­கர்கள் மழை, வெயில் பாராது காடு, மேடு, பள்ளம் ஆகிய பகு­தி­க­ளுக்கு சென்று அஞ்சல் விநி­யோகம் செய்­ப­வர்கள். பிர­தான நகரம், மலை நாடு போன்ற இடங்­களில் (Foot Post Man) நடை மூலம் இன்னும் அஞ்சல் சேவை நடை­பெற்று வரு­கி­றது. சில பகு­தி­க­ளிற்கு தோணி, சிறிய கப்பல் ஆகி­ய­வற்றின் ஊடாக சென்று அஞ்சல் விநி­யோகம் நடை­பெ­று­கி­றது.
தபால் சேவ­கர்­களை தபால் மாமா, தபால் மாத்­தையா, பியோன் போன்ற வார்த்­தை­களில் மக்கள் அழைக்­கின்­றனர்.
எமது நாட்டின் சகல அரச நிறு­வ­னங்கள், கூட்டுத் தாப­னங்கள் காலையில் அஞ்­சல்­களை எதிர்பார்த்து வேலை­களை ஆரம்­பிக்­கின்­றனர். அதேபோல் வேலை முடி­வ­டையும் நேரத்தில் தமது அன்­றைய அஞ்­சல்­களை அனுப்­பு­கின்­றனர்.
காலையில் பெரும்­பாலும் சீருடை அணிந்த தபால் சேவ­கர்­களின் மணி ஓசையை எதிர்­பார்த்து காத்து இருப்­பார்கள். தபால் சேவ­கர்­களின் சேவை இன்றி எந்த ஒரு தபா­ல­கமும் இயங்க முடி­யாது. தபால் சேவ­கர்கள் அஞ்சல் விநி­யோ­கத்­துடன் மின்­சாரம், தொலை­பேசி பட்­டியல், பண அள­வீடு, காப்­பு­றுதி பணம் அற­வீடு போன்ற நட­வ­டிக்­கை­களை மக்­களின் கால­டியில் நிறை­வேற்றி வைக்­கின்­றனர்.
இலத்­தி­ர­னியல் வளர்ச்­சியில் குறும்­செய்தி (SMS), மின்­னஞ்சல் (Email), தொலை­நகல் (Fax) வளர்ச்சி பெற்­றாலும் மூலப்­பி­ர­திகள் (Original) காசோ­லைகள், கோவைகள், கட­வுச்­சீட்டு, ஆள் அடை­யாள அட்டை, பரீட்சை முடி­வுகள், அந்­த­ரங்க செய்­திகள் ஆகி­ய­வற்றை பரிமாற்றம் செய்வதற்கு மூடிய தபால்களிற்கு மாற்றீடு இவ்வுலகில் இல்லை.
அஞ்சல் பொருட்களை விநியோகத்தில் பெரும் பங்கு ஆற்றி வரும் தபால் சேவகர்களை இன்றைய 141 ஆவது உலக அஞ்சல் தினத்தில் கௌரவிப்போம். எமது நாட்டில் 200 ஆண்டுகள் கடந்து அஞ்சல் சேவை நடைபெற்றுவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here