
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நாட்டுப் பற்றாளருமான காவலூர் வி.நவரத்தினம் அவர்களின் நினைவுப் பகிர்வு, நேற்று யாழ்ப்பாணம் தீவகம் புளியங்கூடல் பகுதியில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் அனுஷ்டிக்கப்பட்டது.
அவரது திரு உருவப் படத்திற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விளக்கேற்றி வைத்ததுடன், கட்சி ஆதரவாளர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். வி.நவரத்தினம் நினைவாக, பயன்தரும் மரக்கன்றும் நாட்டப்பட்டது. நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், கொழும்பு தமிழ் சங்கத் தலைவரும் சட்டத்தரணியுமான ந.காண்டீபன், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், பிரதேச மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.




