
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் வருடாந்தம் நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் நேற்று 05.11.2022 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு நந்தியார் பகுதியில் ஆரம்பமாகியிருந்தன.
நேற்று தனிநடிப்பு. கவிதை, கட்டுரை ஆகிய போட்டிகள் இடம்பெற்ற அதேவேளை, இன்று (06.11.2022) ஞாயிற்றுக்கிழமை பேச்சு போட்டிகள் சிறப்பாக இடம்பெற்றிருந்தன. எதிர்வரும் (12.11.2022) சனிக்கிழமை பாட்டு போட்டிகளும் இடம்பெறவுள்ளன.
இன்று நடைபெற்ற அனைத்துப் பேச்சுப் போட்டி பிரிவுகளிலும் 300வரையான போட்டியாளர் பங்குபற்றியிருந்தனர். காலை 9:15 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பித்த போட்டிகள் 6 பிரிவுகளாக இடம்பெற்றிருந்தது. 600இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இன்று இடம்பெற்ற பேச்சுப் போட்டிகளின் போது சில பதிவுகள்….!
–
.