பிரான்சில் இடம்பெற்ற லெப்.கேணல் நாதன் கப்டன் கஜன் ஆகிய மாவீரர்களின் கல்லறை வணக்க நிகழ்வு!

0
478

பிரான்ஸ் தலைநகர் பரிசில் வைத்து 26.10.1996 அன்று சிறீலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதிப்பொறுப்பாளர் லெப்.கேணல் நாதன் மற்றும் ஊடகப்போராளியும் ஈழமுரசின் நிறுவன ஆசிரியருமான கப்டன் கஜன் ஆகியோரின் 26ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (26.10.2022) புதன்கிழமை பிரான்சில் இம் மாவீரர்களின் கல்லறை அமைந்துள்ள பந்தன் துயிலும் இல்லத்தில் இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக பொதுச் சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனைப்‌ பொறுப்பாளர் திரு.நிதர்சன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து குறித்த மாவீரர்களின் கல்லறைகள் மீது தமிழீழத் தேசியக் கொடி போர்த்தப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது.


லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகிய மாவீரர்களின் கல்லறைகளுக்கு லெப்.கேணல் நாதன் அவர்களின் சகோதரனும் கப்டன் கஜன் அவர்களின் சகோதரனும் ஈகைச்சுடரினை ஏற்றி மலர்மாலை அணிவித்தனர். தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.


பிரான்சு வருகைதந்து குறித்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செெயற்பாட்டாளர் திரு.பாலசுந்தரம், நினைவுரை ஆற்றியிருந்தார்..
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவுகண்டது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here