
பிரிட்டிஷ் பயணிகள் மீது கவனம்!
சுகாதாரப் பாதுகாப்புச் சபையின் கூட்
டம் அதிபர் மக்ரோன் தலைமையில்
நாளை வெள்ளிக்கிழமை கூட்டப்பட
வுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நத்தார் விடுமுறைக்காக நாட்டின் சகல
பாடசாலைகளும் நாளையுடன் மூடப்படு
கின்றன. ஒமெக்ரோன் உட்பட தொற்று
நிலைவரம் குறித்து ஆராயவும் நத்தார்
புதுவருட கொண்டாட்ட காலப்பகுதியில்
கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார விதி
களைத் தீர்மானிப்பதற்காகவுமே பாது
காப்புச் சபை கூடுகின்றது.
விடுமுறை காலப் பகுதியில் அவசர
சிகிச்சைப் பிரிவுகளில் நோயாளர் எண்
ணிக்கை 4ஆயிரத்தை எட்டும் என எதிர்
பார்க்கப்படுவதால் புதிய சில தீர்மானங்
கள் வார இறுதியில் எடுக்கப்படும் என்ற
தகவலை அரசாங்கப் பேச்சாளர் கப்ரி
யேல் அட்டால் ஊடகங்களுக்குத் தெரி
வித்துள்ளார். நத்தார் குடும்ப ஒன்று
கூடல்கள் மற்றும் விடுமுறைப் பயணங்
களின்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் தொடர்பாகவே தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.
இங்கிலாந்தில் இருந்து வருகின்ற சகல
பயணிகளுக்கும் பிசிஆர் பரிசோதனை
கட்டாயமாக்குகின்ற முடிவும் எடுக்கப்பட
லாம் என்று அறியப்படுகிறது. இங்கிலா
ந்தில் தொற்றுநோய் தொடங்கியதில்
இருந்து இதுவரை பதிவுசெய்யப்படாத
எண்ணிக்கையாக 78,610 தொற்றுக்கள்
நேற்றுப் பதிவாகியுள்ளன. அங்கு ஒமெக்
ரோன் வைரஸ் மிக வேகமாகப் பரவிவரு
கிறது.
இங்கிலாந்தில் இருந்து வருவோர் எவரா
யினும் அவர்கள் தடுப்பூசி ஏற்றியவராக
இருப்பினும் 24 மணி நேரங்களுக்குள்
செய்யப்பட்ட வைரஸ் சோதனைச் சான்றி
தழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட
வுள்ளது.
🔴110,000 போலி சுகாதாரப் பாஸ்கள்!
இதேவேளை,
நாடெங்கும் ஒரு லட்சத்துப் 10 ஆயிரம்
போலி சுகாதாரப் பாஸ்கள் புழக்கத்தில்
உள்ளன என்பது தெரியவந்துள்ளது.
இவை தொடர்பாக இதுவரை நூற்றுக்கு
மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
நானூறு விசாரணைகள் தொடங்கப்பட்
டுள்ளன என்று ஏஎப்பி செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
குமாரதாஸன். பாரிஸ்.
16-12-2021