
குறிஞ்சாக்கேணி படகு விபத்து – மீட்புப் பணிகள் தொடர்கின்றன!
திருகோணமலை குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற படகு விபத்தில் பாடசாலை மாணவர்கள் 4 பேர் உட்பட 6 பேர் பலியானதுடன் 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் நால்வர் கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
படகின் கொள்ளவை மீறி பயணிகளை ஏற்றிச்சென்றமையாலேயே விபத்து சம்பவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.