கோப்பாயில் கோர விபத்து: காவல்துறை தமிழ் பெண் பலி!

0
393

கோப்பாய் சந்திக்கு அண்மையில் உந்துருளியில் சென்றுகொண்டிருந்த தம்பதியினரை பின்னால் வந்த டிப்பர் மோதியதில் காவல்துறை தமிழ் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று முற்பகல் 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கோப்பாய் சந்தியில் உள்ள சமிக்ஞை விளக்கை கடந்து 100 மீற்றர் தூரத்தில் உந்துருளி சென்று கொண்டிருந்தபோது (கைதடிப் பக்கமாக – இறைச்சிக்கடைக்கு அண்மையில்) பின்னால் வந்த டிப்பர் வாகனம் உந்துருளியை முந்திச் செல்ல முற்படுகையில் டிப்பரில் உந்துருளி உரசியதால் உந்துருளி சரிந்துள்ளது. உந்துருளியிலிரு பெண் விழுந்ததில் டிப்பர் சில்லினுள் அகப்பட்டு தலை பகுதி நசுங்கியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இதில் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணே உயிரிழந்துள்ளார்.

கணவர் மற்றைய பக்கமாக விழுந்ததால் உயிர்தப்பியுள்ளார். இவர் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஆவார்.

டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here