பிரான்சு வித்ரி சூ சென் மாநகர சபையில் தமிழீழ மக்களுக்கு ஆதரவான தீர்மானம்!

0
695

பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான வித்றி சூ சென் என்னும் நகரத்தில் நேற்று 19.05.2021 தமிழீழ மக்களுக்கு ஆதரவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளும் கட்சியினர் எதிர்கட்சியினருடன் பிராங்கோ தமிழ்ச்சங்கம் அண்மைக்காலமாக தமது உறவைப் பலப்படுத்தியிருந்தது. பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு.கயினஸ், மற்றும் தமிழ்ச்சங்கக் கூட்டமைப்பின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் திரு. பாலகுமாரன் மற்றும் தமிழீழ மக்கள் பேரவை பொறுப்பாளர் திரு. திருச்சோதி, தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் மாநகரமுதல்வர் மற்றும் துணை முதல்வர் ரவ்பால் பாண்டிச்சேரி உணர்வுள்ள தமிழர் தமிழினப்பிரச்சனையும், தமிழினத்திற்கு நடந்த இனப்படுகொலை பற்றியும் மாநகர முதல்வருக்கு எதிர்கட்சியினரும்இரண்டு கட்டமாக கடந்த நாட்களில் தெரியப்படுத்தியிருந்தனர். அதன்பலனாக நேற்று 19.05.2021 நள்ளிரவு வரை சென்ற அனைத்துக் கட்சிகளின் சந்திப்பில் தமிழ் மக்களின் நிலைப்பாடு விலாவாரியாக திரு.ரவ்பால் அவர்களால் எடுத்துக்கூறப்பட்டு தீர்மான இனிதே நிறைவேற்றப்பட்டது. முள்ளிவாய்க்கால் 12 ஆவது ஆண்டு நினைவாக கடந்த 17.05.2021 கொட்டும் மழைக்கு மத்தியில் கவனயீர்ப்புப் போராட்டம் இங்கு நடாத்தப்பட்டதும் இதில் துணை முதல்வர் கலந்து கொண்டு ஆதரவுக்குரல் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
இதே போன்று 20.05.2021 இன்று மாலை 18.00 மணிக்கு நொய்சிலி செக் என்னும் இடத்தில் உள்ள மாநகரசபையில் இத்தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. நொய்சிலி செக் பிராங்கோ தமிழ்ச்சங்கம் கடந்த மாதம் தமிழ்ச்சங்க அரசியல் பிரிவு திரு. பாலகுமாரன் மற்றும் தமிழீழ மக்கள் பேரவை உறுப்பினர்கள், தமிழ்சங்கத்தலைவர் திரு. சசி மற்றும் உறுப்பினர்கள் சந்தித்து இக்கோரிக்கையை விடுத்திருந்தனர். அதன் பிரகாரம் இத்தீர்மானம் இன்று கொண்டுவரப்படவுள்ளது. இங்கும் கடந்த 17.05.2021 கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றதும் அதில் மாநகரமுதல்வர் கலந்து கொண்டு உரையாற்றியதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here