முல்லைத்தீவு முத்தையன்கட்டு இடதுகரை பகுதியில் இடம்பெற்ற தீ பரவலில் மூன்று கடைகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முத்தையன்கட்டு இடதுகரை பகுதியில் இன்று வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 3 கடைகள் முற்றாக எரிந்து சேதம் அடைந்துள்ளன.
இதையடுத்து குறித்த தீ பரவல் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.