
வவுனியா, கனகராயன்குளம் பகுதியில், காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர்.
நேற்று (22) குறித்த பகுதியில் உள்ள வீடொன்றின் அருகாமையில் சடலம் ஒன்று காணப்படுவதாக கனகராயன்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார், சடலத்தை அடையாளப்படுத்தியதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த சடலத்தில் காயங்கள் காணப்படுகின்ற நிலையில், கொலை என்ற சந்தேகத்தில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சடலம் தொடர்பான மரண விசாரணைக்காக, வவுனியா நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்லீமா பௌசானா நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.
க. இந்திரகுமார் எனும் 75 வயதான நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.