ஆண்டுதோறும் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையால் நடாத்தப்படும் அனைத்துலகத் தமிழ்மொழி எழுத்துத்தேர்வு 06-06-2015 அன்று டென்மார்க்கில் நடைபெற்றுள்ளது.
பதினாறு இடங்களில் வளர்தமிழ் 1 தொடக்கம் வளர்தமிழ் 12 வரையான ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள இத்தேர்விற்குத் தோற்றியுள்ளனர். இத்தேர்வில் தோற்றியுள்ள மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் இத்தேர்வை எழுதியதைக் காணக்கூடியதாக இருந்தது.