கிளிநொச்சியில் கோரவிபத்து; ஒருவர் பலி!

0
209

கிளிநொச்சி ஜெயபுரம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட மன்னார் யாழ் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

வீதியில் தரித்து நின்ற பார ஊர்தியுடன் யாழ் நோக்கி பயணித்த வான் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் கடந்த வியாழக்கிழமை இரவு 8.40 மணியளவில் இடம்பெற்றள்ளதாக ஜெயபுரம் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த பார ஊர்தியானது தரித்து நிற்பதற்கான எந்தவொரு சமிக்கையும் இல்லாத நிலையில் யாழ் நோக்கிய திசையில் நிறுத்தப்பட்டுள்ளது.

அதே திசையில் பயணித்த வான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தியுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

விபத்தில் வானில் பயணித்த மூவரில் சாரதிக்கு அருகில் இருந்து பயணித்த நபர் உயிரிழந்ததுடன், சாரதி மற்றும் ஒருவர் படுகாயங்களிற்கு உள்ளாகியுள்ளனர்.

உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியை சேர்ந்த 43 வயதுடைய சுவேந்திரன் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் முழங்காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டது.

மேலிக விசாரணைகளை ஜெயபுரம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here