யாழ். உசன் பகுதியில் தொடருந்து மோதி இளைஞன் படுகாயம்!

0
461

Sri_Lankan_trainஉசன் பகுதியில் தொடருந்து மோதியதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். யாழ். உசன் பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற கடவையை துவிச்சக்கரவண்டியில் கடக்க முற்பட்டபோது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த தொடருந்து மோதித்தள்ளியதில் குறித்த இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.
மேலும் குறித்த விபத்தில் ஜெபநாயகம் கணேசன் சதுர்சன் (வயது 17) என்ற இளைஞரே காயமடைந்தவராவார்.
இதேவேளை படுகாயமடைந்த இளைஞன் முதலில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here