பிரான்சு ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் நிதியுதவியுடன் வன்னிப்பெருநிலப்பரப்பில் பல பகுதிகளிலும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
பிரான்சு ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனம் விளையாட்டில் மட்டுமல்ல மனிதநேயத்திலும் முன்னுதாரணமாக நிற்பது. இதனைப் பல தடவைகள் இவர்கள் நிரூபித்தவர்கள். இவர்களின் உன்னத பணி தொடர்ந்தும் எமது மக்களின் துயரை துடைக்க வேண்டும். இதற்கு வேராய் இருந்துவரும் அனைத்து விளையாட்டுக்கழகங்கள், வீரர்கள், ஆதரவாளர்கள் கரங்களை அன்புரிமையோடு இறுகப்பற்றிக்கொள்கின்றோம்.