உலக நாடுகளிடையே ஒற்றுமை இருந்தால்தான் கொரோனாவை வீழ்த்தமுடியும்!

0
564

அதிகமான சவப்பெட்டிகளை சுமக்க விரும்பவில்லையென்றால், தயவு செய்து கொரோனா வைரஸ் விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்,

அதிகமான சவப்பெட்டிகளை சுமக்க விரும்பவில்லையென்றால், தயவு செய்து கொரோனா வைரஸ் விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள், உலக நாடுகளிடைேயே ஒற்றுமை இருந்தால்தான் கொரோனா வைரஸை வீழ்த்தமுடியும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் சுடச்சுட, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

கொரோனா வைரஸால் அமெரிக்கா மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை அங்கு 4 இலட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளார்கள், 14 ஆயிரம் பேர் உயிரிழந்துள்னர். இதனால் ஜனாதிபதி ட்ரம்புக்கு தொடர்ந்து மக்கள் மத்தியில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸை எப்படியாவது கட்டுக்குள் கொண்டு வர முயன்று வருகிறார்.

ஆனால், சீனா கொரோனா வைரஸிலருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதைப் பார்த்த ஜனாதிபதி ட்ரம்ப் தனது கோபத்தை உலக சுகாதார அமைப்பின் மீது திருப்பினார்.

கொரோனா வைரஸ் குறித்து முன்கூட்டியே போதுமான எச்சரிக்கை அறிவிப்புகளை உலக சுகாதாரஅமைப்பு தெரிவிக்கவில்லை. சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு நடப்பதால், இனிமேல் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கும் நிதியை நிறுத்தப் போகிறோம் என்று ட்ரம்ப் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் ஜெனிவாவில் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் ட்ரம்பின் குற்றச்சாட்டு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர் கூறியதாவது:

கொரோனா வைரஸ் மிகத்தீவிரமாக உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதைத் தடுக்க உலக நாடுகளுக்கு இடையே ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் மிகவும் அவசியம். சீனாவும், அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்த ஆபத்தான எதிரியை தோற்கடிக்க வேண்டும்

நான் உலகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளைக் கேட்டுக்கொள்வதெல்லாம் உங்கள் மக்களைக் காப்பாற்ற வேண்டும், தயவு செய்து கொரோனா விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்.

என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் சுடச்சுட, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

கொரோனா வைரஸால் அமெரிக்கா மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை அங்கு 4 இலட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளார்கள், 14 ஆயிரம் பேர் உயிரிழந்துள்னர். இதனால் ஜனாதிபதி ட்ரம்புக்கு தொடர்ந்து மக்கள் மத்தியில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸை எப்படியாவது கட்டுக்குள் கொண்டு வர முயன்று வருகிறார்.

ஆனால், சீனா கொரோனா வைரஸிலருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதைப் பார்த்த ஜனாதிபதி ட்ரம்ப் தனது கோபத்தை உலக சுகாதார அமைப்பின் மீது திருப்பினார்.

கொரோனா வைரஸ் குறித்து முன்கூட்டியே போதுமான எச்சரிக்கை அறிவிப்புகளை உலக சுகாதாரஅமைப்பு தெரிவிக்கவில்லை. சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு நடப்பதால், இனிமேல் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கும் நிதியை நிறுத்தப் போகிறோம் என்று ட்ரம்ப் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் ஜெனிவாவில் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் ட்ரம்பின் குற்றச்சாட்டு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர் கூறியதாவது:

கொரோனா வைரஸ் மிகத்தீவிரமாக உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதைத் தடுக்க உலக நாடுகளுக்கு இடையே ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் மிகவும் அவசியம். சீனாவும், அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்த ஆபத்தான எதிரியை தோற்கடிக்க வேண்டும்

நான் உலகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளைக் கேட்டுக்கொள்வதெல்லாம் உங்கள் மக்களைக் காப்பாற்ற வேண்டும், தயவு செய்து கொரோனா விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here