ஏறாவூர் ஐயங்கேணியில் தொடருந்தில் பாய்ந்து இளைஞன் மரணம்!

0
140

eravoorமட்டக்களப்பு தொடருந்து நிலையத்திலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்பட்ட இரவுநேர கடுகதி தொடருந்தில் இளைஞர் ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி சம்பவம் ஏறாவூர் ஐயங்கேணி பிரதேசத்தில் இரவு 8.52 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதனால் குறித்த தொடருந்து சிறிதுநேரம் குறித்த பிரதேசத்தில் நிறுத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த இளைஞனின் சடலம் தொடருந்தில் ஏற்றப்பட்டு வாழைச்சேனை தொடருந்து நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது .
25 வயது மதிக்கத்தக்க குறித்த இளைஞன் மட்டக்களப்பு மாவடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த மகேந்திரராசா என தெரிவிக்கப்படுகின்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here