இரண்டாவது உலகத் திருக்குறள் மாநாடு -2020 பன்னாட்டுக் கருத்தரங்கம் யாழ்.பல்கலையில்!

0
536

இரண்டாவது உலகத் திருக்குறள் மாநாடு -2020 பன்னாட்டுக் கருத்தரங்கம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கோலாகலமாக நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.

இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழ்த் தாய் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இந்தியாவின் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், இதய நிறைவு தியான அமைப்பு, ஸ்ரீராமச்சந்திர மிஷன்ஆகியன இணைந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தின் ஒத்துழைப்புடன் உலகத் திருக்குறள் இரண்டாவது மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துகின்றது.

மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநட்டின் ஆரம்பநாள் நிகழ்வுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த் துறைப் பேராசிரியர் முனைவர் கி.விசாகரூபன் தலைமையில் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நேற்று ஆரம்பமாகியது.

மாநாடு இடம்பெறும் கலையரங்கின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலைகளுக்கு யாழ். பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி போராசிரியர் க.கந்தசாமி மற்றும் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி கலாநிதி க.சுதாகர் ஆகியரோர் வணக்கம் செலுத்தினர். இதனைத் தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் மாநாடு ஆரம்பமாகியது. இதன்போது திருக்குறள் பரதநாட்டிய வரவேற்பு நடனமும் நடைபெற்றது. இதன் பின்னர் நிகழ்வின் வரவேற்புரையை யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கே.ரீ.கணேசலிங்கம், இலண்டன் கோல்ட் ஸ்மித் பல்கலைக்கழக ஓய்வுநிலைப் பேராசிரியர் சிவாபிள்ளை ஆகியோர் நிகழ்த்தினர்.

இதன் பின்னர் ஆசியுரையை தென்னிந்திய திருச்சபை பேராயர் கலாநிதி ஜெபநேசனும், யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் கலாநிதி சொஞ்சொற்செல்வர் ஆறுதிருமுகன், அவுஸ்ரேலியா மெல்போர்ன் தமிழ்ச் சங்க ஆலோசகர் ம.ஜெயராமசர்மா ஆகியோரும் நிகழ்த்த தலைமையுரையை தமிழ்த்துறைத் தலைவர் கி.விசாகரூபனும்,நோக்கவுரையை தமிழ்த் தாய் அறக்கட்டளை பொதுச் செயலாளர் உடையார்கோவில் குணா ஆகியோரும் நிகழ்த்தினர்.

இதன் பின்னர் நிகழ்வில் விருந்தினர் உரைகளும் நடைபெற்று விருது வழங்கலும் நடைபெற்றது.

மேலும் மாநாட்டில் இந்தியா, மலேசியா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் வருகைதந்திருந்த பல பேராளர்கள் முனைவர்கள் உட்பட யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராளர்கள், முனைவர்கள், மாணவர்கள், ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here