யாழ்.புலோலியில் கத்திமுனையில் கொள்ளை!

0
215

யாழ். புலோலியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் உள்ளவர்களை கத்தி முனையில் அச்சுறுத்தி எட்டுப் பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துத் தப்பித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று (17) இரவு 7 மணியளவில் பருத்தித்துறை புலோலியில் இடம்பெற்றதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீட்டில் உரிமையாளர்கள் இருந்த வேளை, முகத்தைத் துணிகளால் மறைத்துக் கட்டிக் கொண்டு உட்புகுந்த மூவர், கத்தியைக் காட்டி அச்சுறுத்தி வீட்டில் இருந்தவர்கள் அணிந்திருந்ந நகைகைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here