பிரான்சில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் உணவு தவிர்ப்பு கவனயீர்ப்பு நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் பாரிஸ் Place de la Républiqueபகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நான்காவது நாளாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஈகைச் சுடரினை சிறிஸ்கந்தராஜா அவர்கள் ஏற்றிவைக்க மாவீரர் பணிமனையைச் சேர்ந்த பிறேமிலா அவர்கள் மலர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மலர்வணக்கம் செலுத்தினர். பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பு உறுப்பினர் பிரெஞ்சு மொழியிலான துண்டுப்பிரசுரங்களை வழங்கி, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தொடர்பான விளக்கங்களையும் வழங்கினார்.
மாலை 5 மணிவரை குறித்த கவனயீர்ப்பு நிகழ்வு Place de la République பகுதியில் இடம்பெறவுள்ளது.
நாளை மே 18 திங்கட்கிழமை மாபெரும் பேரணி இடம்பெறவுள்ளது. இதேவேளை, பிரான்சு செவ்ரோன் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கல் அமைந்துள்ள இடத்தில் காலை 9.30 மணிக்கும் கிளிச்சியில் நினைவுத்தூபி அமைந்துள்ள இடத்தில் காலை 11 மணிக்கும் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்படும்.
காலம் : நாளை 18.05.2015 திங்கட்கிழமை
நேரம்: பேரணி ஆரம்பம் 14:00 மணிக்கு
இடம் : Place de la Chapelle Metro: La Chapelle- Gare de Nord ligne 2-4-5
RER: B-D Gare de Nord
நினைவு வணக்க நிகழ்வு
காலம் : 18.05.2015
நேரம்: 16h30 மணிக்கு
இடம் : Place de la République Metro : République ligne 5-8-9-11