மட்டக்களப்பு செங்கலடி பிரேதசத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் செங்கலடி அம்மன்புரத்தைச் சேர்ந்த மதியழகன் மோகன்ராஜ் (வயது 26) என்பவரே உயிரிழந்தவராவார்.

உந்துருளியும் மீது டிப்பர் வாகனமும் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணை களை மேற்கொண்டுள்ளனர்.