பூநகரி முழங்காவிலில் யானை தாக்கி பெண் பலி!

0
374

கிளிநொச்சி பூநகரி முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராஞ்சி பகுதியில் நேற்றுக் காலை யானை தாக்கியதில் தாயார் பலியானதுடன், 3 வயது பிள்ளை படுகாயமடைந்த நிலையில் முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் உயிரிழந்த நபரின் காணியில் நேற்றுக் காலை 7 மணியளவில் யானை தென்னங்கன்றுகளை உணவாக உட்கொண்டு இருந்தவேளை, குறித்த யானையைத் துரத்த முற்பட்டபோது குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் சிவநேயசன் சுகாசினி என்ற தாயார் உயிரிழந்ததுடன், அவரது 3 வயது பெண் பிள்ளையும் படு காயமடைந்துள்ளார். 

காயமடைந்த தாயார் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அழைத்து வரப்பட்டபோதே உயிரிழந்துள்ளதாகவும், சிறுமியும்அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 உயிரிழந்தவரின் சடலம் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள துடன் மேலதிக விசாரணைகளை முழங்காவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.           

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here