இலங்கைக்கு வழங்கப்படும் கால அவகாசம் இன அழிப்பை ஊக்குவிக்கவே பயன்படும் – ரவிகரன்

0
131

ravikaranஇலங்கைக்கு வழங்கப்படும் கால அவகாசம் தமிழகளுக்கு எதிரான இன அழிப்பை ஊக்குவிக்கவே பயன்படும் என்று வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அமெரிக்க பிரதிநிதிகளிடம் நேரில் தெரிவித்தார்.

மேலும் தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாணசபையில், “இன அழிப்பு” தீர்மானம் முழு ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டிருக்கின்ற நிலையில்,இங்கு நடந்தது வெறுமனே,மனித உரிமை மீறல் என்றோ போர்க்குற்றம் என்றோ மட்டுப்படுத்தப்பட்டு அடையாளப்படுத்தப்படுவது தவிர்க்கப்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.   நேற்று முற்பகல் 9.30 மணியளவில் முல்லைத்தீவில் அவரது இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார். அமெரிக்க தூதரக அரசியல் அதிகாரி ஜோசப் ஸ்காலர் மற்றும் USAID அதிகாரி ஜேசன் அப்லான் ஆகியோர் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

ஒன்றரை மணித்தியாலங்களாக இடம்பெற்ற இச் சந்திப்பில் பல விடயங்கள் உரையாடப்பட்டிருபதாக தெரிய வருகிறது.

தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாணசபையில்,” 60 ஆண்டுகளாக இங்கே தமிழர்களுக்கு எதிராக இன அழிப்பு நடைபெற்று வருகிறது என்பதை ஆதாரங்களுடன் தீர்மானமாக வெளியிடப்பட்டிருக்கிறது. இதை தமிழர்களின் ஒருமித்த அதிகாரபூர்வமான குரலாக அங்கீகரித்து, இங்கு நடந்ததை வெறுமனே மனித உரிமை மீறல் என்றோ போர்க்குற்றம் என்றோ மட்டுப்படுத்தி அடையாளப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

ராணுவத்தினர் அகற்றப்படவில்லை.மாறாக எனது இல்லத்தில் கடற்படைச் சிப்பாய் இராணுவத் தளபாடம் இருக்கிறதா என சோதனை செய்ய வருமளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது. அபகரிக்கப்பட்ட தமிழர் நிலங்களை விடுவிப்பதற்கு  தற்போதைய அரசிடம் நீதியான அணுகுமுறை இல்லை. மத அடையாளங்கள் திணிப்பு தொடபில் எந்த மாற்றமும் இல்லை.ஆக, கடந்த தேர்தலில் நடந்தது ஆள் மாற்றம் மட்டுமே எனது தெளிவாகியுள்ளது. இந்நிலையில் சர்வதேச விசாரணை அறிக்கையை வெளியிடாமல் இலங்கைக்கு கொடுக்கும் கால அவகாசமானது தமிழர்களுக்கெதிரான இன அழிப்பை ஊக்குவிக்கவே பயன்படப்போகிறது. என்று அமெரிக்க பிரதிநிதிகளிடம் நேரில் தெரிவித்தார் ரவிகரன்.

மேலும் வேலை வாய்ப்பின்மை, உள்வீதிகள் செப்பனிடப்படாமை உள்ளிட்ட  பூர்த்தி செய்யப்படாத அபிவிருத்தி விடயங்கள், தாயகத்தில் மக்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகள், உட்கட்டமைப்பு வசதிகள் பூர்த்தியக்கப்படாத பாடசாலைகள் பலவற்றின் நிலை உள்ளடங்கலாக பல விடயங்கள் பற்றி கலந்துரையாடபட்டிருப்பதாக தெரிய வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here