மூன்­றா­வது நாளா­கவும் துமிந்தமீது விசா­ரணை!

0
202

duminthaபிர­பல சர்­வ­தேச போதைப் பொருள் கடத்தல் மன்னன் வெலே சுதா­வுடன் தொடர்­பினை கொண்­டி­ருந்­தமை தொடர்பில் நேற்று மூன்­றா­வது நாளா­கவும் கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஆர்.துமிந்த சில்­வா­விடம்

குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் விசா­ர­ணை­களை நடத்­தினர். கறுப்புப் பணத்­தினை சுத்­தப்­ப­டுத்தும் சட்­டத்தின் கீழும், போதைப் பொருள் தடைச் சட்­டத்தின் அபா­ய­க­ர­மான ஒள­த­டங்கள் தொடர்­பி­லான பிரிவின் கீழும் இந்த விசா­ர­ணைகள் இடம்­பெற்­ற­தா­கவும் நேற்று மட்டும் அவர் சுமார் 6 மணி நேரங்கள் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­த­பப்ட்­ட­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண கேச­ரிக்கு தெரி­வித்தார்.

இது வரை குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணை­களில் சில தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் துமிந்த சில்­வா­விடம் இருந்து பெறப்­பட்ட வாக்கு மூலத்­தையும் முன்­ன­தாக கம்­பொல விதா­ன­லாகே சமந்த குமார அல்­லது வெலே சுதா­விடம் பெறப்­பட்­டுள்ள வாக்கு மூலத்­தையும் ஒப்­பிட்டு பார்த்து அடுத்த கட்ட நட­வ­டிக்­கைக்கு செல்­ல­வுள்­ள­தா­கவும் பொலிஸ் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண மேலும் குறிப்­பிட்டார். இவ்­வி­ரண்டு வாக்­கு­மூ­லங்­க­ளையும் ஒப்­பிட்டு அதன் உண்மைத் தன்மை குறித்து ஆராய வேண்டி உள்­ள­தா­கவும் அதனைத் தொடர்ந்து சாட்­சி­யங்­களின் அடிப்­ப­டையில் சட்ட மா அதி­பரின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக அடுத்­த­கட்ட நகர்­வினை குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் முன்­னெ­டுப்பர் எனவும் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண சுட்­டிக்­காட்­டினார்.

நேற்­றைய தினம் காலை 9.00 மணிக்கு நன்காம் மாடிக்கு அழைக்­கப்­பட்ட துமிந்த சில்வா அங்கு வைத்து விஷேட குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பொலிஸ் குழுவால் சுமார் 6 மணி நேரத்­துக்கும் அதி­க­மாக விசா­ரிக்­கப்­பட்டார். இதனை தொடர்ந்து அவர் நேற்று மாலை 5.00 மணி­ய­ளவில் வெளி­யே­றி­ய­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவின் தக­வல்கள் குரிப்­பிட்­டன.

முன்­ன­தாக நேற்று முன் தினம் 11 ஆம் திக­தியும் கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பிப்னர் ஆர்.துமிந்த சில்வா நான்காம் மாடிக்கு அழைக்­கப்­பட்டு ஆறு மணி நேரம் விஷேட விசா­ரணை ஒன்­றுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டார்.அத­னை­விட 10 ஆம் திக­தியும் 8 மணி நேரம் அவ­ரிடம் விஷேட விசா­ர­ணை­யொன்ரு முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது.

தொடர்ந்து மூன்­றா­வது நாளாக துமிந்த சில்வா அழைக்­கப்ப்ட்டு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட போதும் 10 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை ஆரம்­பிக்­கப்­பட்ட விச­ர­ணை­களின் தொடர்ச்­சி­யா­கவே இந்த விசா­ர­ணைகள் அமைந்­தி­ருந்­த­தக குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் குரிப்­பி­டு­கின்­றனர்.

முன்­ன­தாக கடந்த 10 ஆம் திகதி செவ்­வா­யன்ரு சுமார் 8 மணி நேரம் விஷேட விசா­ர­ணைக்கு துமிந்த சில்வா உட்­ப­டுத்­தப்­பட்ட போதும் போதைப் பொருள் தொடர்பில் அவ­ருக்கு உள்ள தொடர்ப்பு குரித்து அன்­றைய தினம் விசா­ரிக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை என அறி­ய­மு­டி­கின்­றது. மாறாக அவரின் சிரு வயதுப் பராயம், இளமைப் பராயம், அர­சியல் பிர­வேசம் உள்­ளிட்ட விட­யங்கள் தொடர்­பி­லேயே இதன் போது விசா­ரிக்­கப்ப்ட்­டி­ருந்­த­தாக குர்றப் புல­னாய்வுப் பிரிவின் உள்­ளக தக­வல்கள் குரிப்­பிட்­டன. இதனை அடுத்தே நேற்று முன் தினம் முற்­பகல் 11.00 மணி­ய­ளவில் மீன்டும் அழைக்­கப்­பட்ட துமிந்த சில்வா தொடர்ச்­சி­யான விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்தார்.

னேற்று முன் தினம் தனது கே.ஈ.5959 என்ற வெள்ளை நிற ஜீப் ரக வாக­னத்தில் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் தலை­மை­ய­கத்­துக்கு வருகை தந்­தி­ருந்த துமிந்த சில்­வா­விடம் முக்­கி­ய­மான இரு விட­யங்­களை மையப்­ப­டுத்தி விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்ப்ட்­டுள்­ளன. இதனை தொடர்ந்தே நேற்றும் அவர் மிகுதி விசா­ர­ணை­க­ளுக்­காக அழைக்­கப்ப்ட்டு நேற்று காலை 8.30 மணி முதல் விசா­ரிக்­கப்ப்ட்­ட­தாக அறி­ய­மு­டி­கின்­றது.

சர்­வ­தேச போதைப் பொருள் கடத்தல் மன்­ன­னான வெலே சுதா என அறி­யப்­படும் கம்­பொல விதா­னகே சமந்த குமா­ர­விடம் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜய­சுந்­த­ரவின் மேற்­பார்­வையின் கீழ் விஷேட குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பொலிஸ் குழு முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள விட­யங்­க­ளுக்கு அமை­வா­கவே இந்த விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் இது வரை முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணை­களில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஆர்.துமிந்த சில்வா வெலே சுதா, குடு லாலித உள்­ளிட்ட பல போதைப் பொருள் கடத்தல் காரர்­க­ளுக்கும் பாது­காப்பு உள்­ளிட்ட உத­வி­களை செய்­து­கொ­டுத்து பெரும் தொகை­யான பணத்­தினை சம்­பா­தித்து வந்­துள்­ளமை வெளிப்­ப­டுத்­த­பட்­டதை அடுத்து அதற்­கான ஆதா­ரங்­களை திரட்ட அவ­ரது வங்­கிக்­க­ணக்­குகள் உள்­ளிட்ட விப­ரங்­களை ஆராய நீதி­மன்றில் அனு­மதி பெற்று ஆரம்­பிக்­கப்­பட்ட நட­வ­டிக்­கைகள் 60 வீதம் வரையில் பூர்த்­தி­ய­டைந்­துள்­ளமை குரிப்­பி­டத்­தக்­கது. அத்­துடன் இது தொடர்­பி­லான விசா­ர­ணை­களில் 80 பேருக்கும் அதி­க­மா­னோ­ரிடம் வாக்கு மூலங்கள் பதிவு செய்­யப்ப்ட்­டுள்­ளன.

கடந்த ஜன­வரி மாதம் 12 ஆம் திகதி பாகிஸ்­தா­னி­லி­ருந்து கைது செய்­யப்­பட்டு இலங்­கைக்கு அழைத்­து­வ­ரப்­பட்ட வெலே சுதா அல்­லது சமந்த குமார மீதான விசா­ர­ணைகள் கிட்­டத்­தட்ட ஒரு மாத­கா­ல­மாக இடம்பெற்று வருகின்றது. இந் நிலையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் வெலே சுதா மீதான விசாரணைகளை ஒரு மாதகாலத்துக்குள் நிறைவுறுத்த பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விஷேட குழுவுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். இந் நிலையில் அந்த விசாரணைகள் இன்னும் முடிவடையாத நிலையில் அடுத்து வரும் ஒரு மாததுக்குள் அதனை நிறைவுருத்த பொலிஸ் மா அதிபர் மீண்டும் ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here