
வெளியில் நண்பர்களுடன் சென்றதாக கூறப்படும் பிரஸ்தாப இளைஞர் அப்பகுதியில் உள்ள வீதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி குற்றுயிராய் கிடந்ததையடுத்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்ட போது உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் விசாரணையினை மேற்கொண்டுவரும் பருத்தித்துறைப் பொலிஸார் அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதுடன் தொடர் விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர். இளைஞனின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மரண விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளது.