நல்லிணக்க முயற்சிக்கு பிரதமர் மோடி பாராட்டு :இலங்கைக்கு விஜயம் செய்ய மங்கள அழைப்பு!

0
266

mangala-samaraweera-meets-pஉத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற் ­கொண்டு புது­டில்லி சென்­றுள்ள வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர, நேற்று மாலை இந்­திய பிர­தமர் நரேந்திர மோடியை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்தி­யுள்ளார்.

புது­டில்­லியில் உள்ள பிர­த­மரின் உத்­தி­ யோ­க­பூர்வ இல்­லத்தில் இடம்­பெற்ற இந் தப் பேச்­சு­வார்த்­தை­யின்­போது பல்­வேறு விடயங்கள் குறித்து கலந்­து­ரை­யா­டப்­பட்­ டுள்­ளன.

குறிப்­பாக, தேர்­தலின் பின்னர் இலங்­கையின் புதிய அர­சாங்கம் நல்­லி­ணக்க செயற்­பாட்டில் முன்­னெ­டுத்­துள்ள நட­வ­டிக்­கை கள் குறித்து வெளி­வி­வ­கார அமைச்சர் மங்

கள சம­ர­வீ­ர­விடம் இந்­திய பிர­தமர் நரேந்­ திர மோடி பாராட்டுத் தெரி­வித்­துள்­ள­தாக இந்­திய ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன.

இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடியை இலங்­கைக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொள்­ளு­மாறு இதன்­போது வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர அழைப்புவிடுத்­துள்ளார்.

இது தொடர்­பான உத்­தி­யோ­க­பூர்வ அழைப்பை அமைச்சர் மங்­கள சம­ர­வீர சமர்ப்­பித்­துள்ளார். அதன்­படி இவ்­வ­ருடம் மார்ச் மாத­ம­ளவில் இந்­திய பிர­தமர் இலங்­கைக்­கான உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொள்வார் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இந்த சந்­திப்­பின்­போது இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான உறவை வலுப்­ப­டுத்­து­வது தொடர்­பாக விரி­வாக ஆரா­யப்­பட்­டுள்­ளது.

இது இவ்­வாறு விரைவில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இந்­தி­யா­வுக்­கான உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொள்­ள­வுள்ளார். தனது முத­லா­வது வெளி­நாட்டு விஜ­ய­மாக ஜனா­தி­பதி இந்­தியா செல்­ல­வுள்ளார்.

இதே­வேளை வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தனது இந்­திய விஜ­யத்­தின்­போது நேற்று முன்­தினம் இந்­திய வெளி­யு­றவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் அதி­கா­ரி­க­ளுடன் பேச்சு வார்த்தை நடத்­தி­யி­ருந்தார்.

இந்ந சந்­திப்பின் போது சுஷ்மா சுவ­ராஜை, இலங்­கைக்கு வரு­மாறு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் இந்­தி­யாவின் பங்­க­ளிப்­புடன் இலங்­கையில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் அபி­வி­ருத்தி திட்­டங்கள் பற்­றியும் ஆலோ­சிக்­கப்­பட்­டள்­ளது.

மேலும் இந்த சந்­திப்­பின்­போது இலங்­கையில் உள்ள தமி­ழக மீன­வர்­களின் பட­கு­களை விடு­விப்­பது தொடர்­பாக நட­வ­டிக்கை எடுத்து வரு­வ­தாக அமைச்சர் சம­ர­வீர குறிப்­பிட்­டுள்ளார்.

இந்­நி­லையில் இந்­தி­யாவில் உள்ள இலங்கை அக­திகள் தொடர்­பா­கவும் இரண்டு நாடு­க­ளி­னதும் வெளி­வி­வ­கார அமைச்­சர்கள் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர். இலங்கை அக­தி­களை இலங்­கையில் மீண்டும் குடி அமர்த்­து­வது தொடர்­பாக இரு நாடு­க­ளுக்கு இடையே இம்­மாத இறு­தியில் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை இலங்­கையில் முன்னர் பணி­யா­ற­றிய இந்­திய தூது­வர்கள் சில­ரையும் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர சந்­தித்து பேச்சு நடத்­தி­யுள்ளார். முன்னாள் இலங்­கைக்­கான இந்­திய தூதுவர் நிருபம் சென் உள்­ளிட்ட பல­ரையும் மங்­கள சம­ர­வீர சந்­தித்து பேச்சு நடத்­தி­யுள்ளார்.

அத்­துடன் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர இந்­தி­யாவின் காங்­கிரஸ் கட்­சியின் தலைவி சோனியா காந்தி மற்றும் இந்­திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் ஆகியோரையும் சந்தித்து இருதரப்பு உறவு குறித்து விரிவாக பேச்சு நடத்தியுள்ளனர்.

இலங்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் வெளிவிவகார அமைச்சராக பொறுப்பேற்ற மங்கள சமரவீர மேற்கொண்டுள்ள முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்திய விஜயம் அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here