வலி.வடக்கில் தமது காணி­க­ளையும் வீடு­க­ளையும் கண்ட மக்கள் அதிர்ச்சி!

0
316

image யாழ்ப்­பாணம் வலி­காமம் வடக்கு இரா­ணுவ உயர் பாது­காப்பு வல­யத்­துக்குள் இருந்த பொது மக்­களின் காணிகள் நேற்­று­முன்­தினம் மூன்றாம் கட்­ட­மாக விடு­விக்­கப்­பட்ட நிலையில் காணி உரி­மை­யா­ளர்கள் நேற்­றைய தினம் சென்று தமது காணி­களை பார்­வை­யிட்டு அடை­யா­ளப்­ப­டுத்­தினர். இதே­வேளை காணி­யு­ரி­மை­யா­ளர்கள் தமது காணிகள் தொடர்­பான பதி­வு­களை அந்­தந்த கிரா­ம­சே­வகர் பிரி­வுகள் ஊடாக விரைவில் மேற்­கொள்ள வேண் டும் என தெல்­லிப்­பழை பிர­தேச செயலர் சிறி­மோகன் தெரி­வித்­துள்ளார்.image

கடந்த 27 வரு­டங்­க­ளுக்கு முன்னர் நாட்டில் நில­விய யுத்தம் கார­ண­மாக வலி­வ­டக்கில் இருந்த மக்கள் தமது சொந்த நிலங்­களை விட்டு வெளி­யே­றி­யி­ருந்­தனர். இவ்­வாறு வெளி­யே­றிய மக்கள் உற­வினர் வீடு­க­ளிலும் தற்­கா­லிக நலன்­புரி நிலை­யங்­க­ளிலும் தற்­போது வரை வாழ்ந்து வரு­கின்­றனர்.
இந்­நி­லையில் தமது காணி­களை விடு­விக்­கு­மாறு பல ஆர்ப்­பாட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்ட நிலையில் கட்டம் கட்­ட­மாக காணி­வி­டு­விப்­புக்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. இரண்டு கட்­டங்­க­ளாக காணி­வி­டு­விப்­புக்கள் இடம்­பெற்­ற­நி­லையில் நேற்­ற­முன்­தினம் மூன்றாம் கட்­ட­மாக 201.3 ஏக்கர் காணிகள் விடு­விக்­கப்­பட்­டன.

image
அதற்­க­மைய வலி.வடக்கில் உள்ள ஜே 233, ஜே 234, ஜே 235, ஜே 236, குரும்­ப­சிட்டி ஜே -238, கட்­டுவன் ஜே-242, மற்றும் வறுத்­தலை விளான் ஜே 241 ஆகிய பகு­தி­களில் உள்ள 201.3 ஏக்கர் காணிகள் மக்­க­ளிடம் மீள கைய­ளிக்­கப்­பட்­டன.
குறிப்­பாக வல்லை, தெல்­லிப்­பழை, அராலி வீதி­யூ­டான 126.18 ஏக்­கர்­களும் காங்­கே­சன்­துறை புகை­யி­ரத நிலை­யத்தை அண்­டி­ய­தான 63 ஏக்­கர்­களும் மற்றும் தெல்­லிப்­பழை 18ஆவது சிங்­க­ரெ­ஜினோ படை முகாமை அண்­மித்த 12ஏக்கர் காணி­க­ளு­மாக மொத்தம் 201.3 ஏக்கர் காணிகள் மக்கள் பாவ­னைக்­காக விடு­விக்­கப்­பட்­டுள்­ளன.
இக் காணி விடு­விப்பின் ஊடாக காங்­கே­சன்­துறை புகை­யி­ரத நிலை­யத்தை அண்­டி­ய­தான பகு­திகள் மக்கள் பாவ­னைக்­காக விடு­விக்­கப்­பட்­டுள்­ளன. அத்­துடன் இக் காணி மீள் கைய­ளிப்பின் ஊடாக பொன் பர­மா­னந்தன் வீதியின் ஊடாக கட்­டுவன் வரை­யான வீதியும் மல்­லாகம் கட்­டுவன் வீதியும் மற்றும் பொன்­ப­ர­மா­னந்தன் மல்­லாகம் இணைப்பு வீதியும் மக்கள் பாவ­னைக்கு மீள கிடைக்­கப்­பட்­டுள்­ளன.

image இதே­வேளை காணிகள் நேற்று முன்­தினம் மக்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட போதும் அவர்கள் தமது காணி­களை உட­ன­டி­யாக சென்று பார்­வை­யி­டு­வ­தற்கு இரா­ணுவம் அனு­மதி மறுத்­தி­ருந்­தது. அத்­துடன் வட­ம­ராச்­சி­யையும் தெல்­லிப்­ப­ளை­யையும் இணைக்­கின்ற வீதி­களும் மூடப்­பட்­டி­ருந்­தன.
இந்­நி­லையில் நேற்­று­முன்­தினம் விடு­விக்­கப்­பட்ட காணி­களை சென்று பார்­வை­யி­டவும் அவற்றை துப்­பு­ரவு செய்­யவும் காணி­யு­ரி­மை­யா­ளர்­க­ளுக்கு இரா­ணு­வத்­தினர் அனு­ம­தித்­தி­ருந்­தனர்.

image
இதே­வேளை தமது காணி­களை அடை­யாளம் கண்ட உரி­மை­யா­ளர்கள் முன்னர் கட்­டப்­பட்­டி­ருந்த வீடுகள் முற்­றாக அழி­வ­டைந்­த­தையும் சேத­ம­டைந்த வீடு­க­ளையும் பார்த்து அதிர்ச்­சி­ய­டைந்­தி­ருந்­தனர்.
மேலும் பல­ரது வீடுகள் மீது பாரிய மரங்கள் வீழ்ந்து வீடுகள் பாரி­ய­ளவில் சேத­ம­டைந்­தி­ருந்­த­துடன் வீடு­க­ளுக்­குள்­ளேயும் பாரிய மரங்கள் வள­ரந்­தி­ருந்­தன. இதே­வேளை குறித்த பகு­தியில் மரங்கள் பற்­றைக்­கா­டு­க­ளாக வளர்ந்­தி­ருந்­த­மையால் தமது வீடுகள் எங்­குள்­ளன என்ற அடை­யா­ளமே தெரி­யாமல் சிலர் தேடிக்­கொண்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
தமது வீடு­க­ளுக்கும் கிரா­மங்­க­ளுக்கும் காவ­லாக சிறு ஆல­யங்கள் அமைத்து வழி­பட்டு வந்த ஆல­யங்கள் இட­மாற்­றப்­பட்டும் சில ஆல­யங்கள் இடிக்­கப்­பட்ட நிலை­யிலும் காணப்­ப­டு­வ­தாக மக்கள் கவலை வெளி­யிட்­டி­ருந்­தனர்.image
இதே­வேளை காங்­கே­சன்­துறை பேரூந்­து­த­ரிப்பு நிலை­ய­மா­னது 27 வரு­டங்­க­ளிற்கு பின்னர் சொந்த இடத்­திற்கு சென்­றுள்­ளது. குறிப்­பாக காங்­கே­சன்­து­றைக்­கான பேரூந்து சேவை­யா­னது படிப்­ப­டி­யாக மீள கைய­ளிக்­கப்­பட பகு­தி­யான மாவிட்­ட­புரம் கந்­த­சாமி கோவில் வரையே முன்னர் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லையில் நேற்­றைய தினம் முதல் காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அன்மையிலுள்ள பழைய பேரூந்து தரிபிடத்திற்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்துக்கு அண்மையில் நீண்டகாலம் காணப்பட்டிருந்த இருந்த இராணுவ சோதனை சாவடிகளும் காவலரன்களும் நேற்றையதினம் முற்றாக நீக்கப்பட்டிருந்தன. இதனூடாக விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு மக்கள் எந்தவிதமான சோதனை நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தாது செல்லக்கூடிய நிலமை ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here