பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகம் வருடாந்தம் நடாத்தும் தமிழ்மொழி பொதுத் தேர்வு மற்றும் புலன் மொழி வளத்தேர்வு – 2025 இல் கலந்துகொள்ளும் மேர்பார்வையாளர்கள், தேர்வு நடத்துநர்கள், தமிழ்ச்சோலைப் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோருக்கான தேர்வு தொடர்பான செயலமர்வு தமிழ்ச்சோலை தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் இன்று (27.04.2025) ஞாயிற்றுக்கிழமை குசான்வீல் பகுதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
அகவணக்கத்தைத் தொடர்ந்து தமிழ்ச்சோலை கீதத்துடன் காலை 10.00 மணியளவில் செயலமர்வு ஆரம்பமாகியது.
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகப் பொறுப்பாளர் திரு.நாகஜோதீஸ்வரன் அவர்கள் செயலமர்வை ஆரம்பித்துவைத்து உரையாற்றினார். ஒருநாள் செயலமர்வாக இடம்பெற்ற இந்நிகழ்வில் சுமார் 260 இற்கும் மேற்பட்ட தமிழ்ச்சோலை ஆசிரிய ஆசிரியைகள் கலந்துகொண்டு தேர்வு தொடர்பான சந்தேகங்களை கேட்டுத்தெரிந்துகொண்டனர்.
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் சார்பில் திரு.சுரேஸ், திரு.மகிந்தன் ஆகியோர் தேர்வுதொடர்பான அறிவுறுத்தல்களை சிறப்பாக வழங்கியிருந்தனர்.
தொடர்ந்து தேர்வுகளில் பங்குபற்றுவோருக்கான அடையாள அட்டைகளும் வழங்கிவைக்கப்பட்டன.
தேர்விற்கான உறுதிப்பிரமாணமும் எடுக்கப்பட்டது.
செயலமர்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி, தேநீர், மதிய உணவு என்பன வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச்செயலமர்வில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர் திரு.பார்த்தீபன் அவர்களும் உரைநிகழ்த்தியிருந்தார். இங்கு பிறந்து தமிழ் ஆசிரியர்களாகக் கடமையாற்றும் பிள்ளைகளைப் பாராட்டியது டன் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒட்டுமொத்த தமிழர்களின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்களும் தனதுகருத்தைப் பகிர்ந்திருந்தார். மே1 , மே18 நிகழ்வுகளில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டிருந்தார்.
இம்முறை பிரான்சில் Île De France – மற்றும் பிரான்சின் வெளிமாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 5 ஆயிரத்து 716 பேர் தேர்வுக்குத் தோற்றவுள்ளதுடன் 300 இற்கு மேற்பட்ட ஆசிரியர்களும் கடமையாற்றவுள்ளதுடன், வரும் 03.05.2025 சனிக்கிழமை 18 தேர்வு நிலையங்களிலும் வரும் 04.05.2025 ஞாயிற்றுக்கிழமை 10 தேர்வு நிலையங்களிலும் 11.05.2025 ஞாயிற்றுக்கிழமை 15 தேர்வு நிலையங்களிலும் புலன்மொழி வளத்தேர்வு கேட்டல், பேசுதல், வாசித்தல் என்ற பிரிவுகளில் நடைபெற ஏற்பாடகியுள்ளதாகவும்
தமிழ்மொழி பொதுத் தேர்வு வரும் 07.06.2018 சனிக்கிழமை LA MAISON DE EXAMENS 7,RUE RUE ERNEST RENAN 94114 ARCEIL (RER – B LA PLACE) என்ற முகவரியில் இடம்பெறவுள்ளதாகவும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தெரிவித்துள்ளது.








