
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையானார்.
அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.