
தமிழின அழிப்பிற்கு நீதி கோரி அனைத்துலக ரீதியாக நடைபெறும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில்,தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றப் பொறிமுறையூடான நீதியினையும் தமிழர்களுக்கு தமிழீழமே இறுதியான தீர்வு என்பதனையும் வலியுறுத்தி 03.03.2025 இன்று பி.ப 2:00 மணியளவில் ,சுவிஸ் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்) தமிழீழ தேசியகொடியேற்றப்பட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.



