
நாளை 03.03.2025 திங்கட்கிழமை ஜெனிவாவில் ஐ.நா.முன்றிலில் நடைபெறவுள்ள மாபெரும் எழுச்சி நிகழ்வில் கலந்துகொள்வதற்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொடருந்து காலை புறப்படவுள்ளது.

நாளை 03.03.2025 திங்கட்கிழமை Gare de Lyon இல் இருந்து காலை 08.18 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 11.29 மணிக்கு ஜெனிவாவைச் சென்றடையும் தொடருந்து, மீண்டும் அன்று இரவு 18.29 மணிக்கு ஜெனிவாவில் இருந்து புறப்பட்டு இரவு 21.42 மணிக்கு Gare de Lyon ஐ வந்தடையவுள்ளது.
இதற்கான பயணச் சீட்டுக்களை பெற்றுக்கொண்டவர்கள் நேரத்துடன் Gare de Lyon தொடருந்து நிலையத்திற்கு வருகை தருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.
– தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு.