
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். அரியாலை மாம்பழம் சந்திக்கு அருகில் இன்றைய தினம்(18) செவ்வாய்க்கிழமை துவிச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவர் மீது டிப்பர் வாகனம் மோதியதில் , சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் .
யாழ். சுண்டுக்குழிப் பகுதியைச் சேர்ந்த பெனடிக் ஜோசெப் பாஸ்கரன் (வயது 61) என்பவரே உயிரிழந்தவராவார்.
மேலும் விபத்து சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்